வெனிசுலாவின் எண்ணெய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்த ரஷ்யா, வெனிசுலா ஜனாதிபதி நிகொலஸ் மதுரோவுக்கு ஆதரவாக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவானது வெனிசுலா அரசாங்கத்துக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான பி.டி.வி.எஸ்.ஏ. இற்கு எதிராக தடைகளை விதித்துள்ளதுடன் அமைதியான அதிகார மாற்றமொன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வெனிசுலா இராணுவத்தை வலியுறுத்தியுள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி நிகொலஸ் மதுரோவும் அவரது சகாக்களும் அந்நாட்டு மக்களது சொத்துகளை இனிமேலும் கொள்ளையடிக்க முடியாது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.
மதுரோவை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் அந்நாட்டு எதிர்க் கட்சியினர் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவும் ஏனைய 20 க்கு மேற்பட்ட நாடுகளும் எதிர்க்கட்சித் தலைவரான ஜுவான் குவாய்டோவை வெனிசு லாவின் ஜனாதிபதியாக அங்கீகரித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவன் மனுசின் கூறுகையில், வெனிசுலா எண்ணெயைக் கொள்வனவு செய்வது தற்போது முதல் நிறுத்தப்படுவதாகவும் ஆனால் குவாய்டோவை ஜனாதிபதியாக அங்கீகரிப்பதன் மூலம் அந்த எண்ணெய் நிறுவனம் தனக்கு எதிரான தடைகளை தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் கூறினார்.
வெனிசுலாவானது தனது எண்ணெய் ஏற்றுமதி தொடர்பான வருமானத்துக்காக பெருமளவில் அமெரிக்காவில் தங்கியுள்ளது. அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியில் 41 சதவீதமான ஏற்றுமதி அமெரிக்காவுக்கே மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்காவால் தனது நாட்டு எண்ணெய்க் கம்பனிக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை குற்றச்செயலொன்றாகக் குறிப்பிட்டுள்ள வெனிசுலா ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ, வெனிசுலா மக்களுக்கு உரிமையான எண்ணெய் வளங்களை அமெரிக்கா திருட முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அமெரிக்காவிலும் ஏனைய சர்வதேச நீதிமன்றங்களிலும் அரசியல் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கையை முன்னெடுக்க பி.டி.வி.எஸ்.ஏ. நிறுவனத்தின் தலைவருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக மதுரோ தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இதன்போது அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் தன்னை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்கில் தனது நாட்டுக்கு எதிராக பொருளாதாரப் போரொன்றை முன்னெடுத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இந் நிலையிலேயே அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கண்டனம் வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM