இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் ‘எலி வலை' என்ற சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் கடந்த 42 நாட்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று முதன்முறையாக ஒரு தொழிலாளியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்திய கப்பல் படையினர், குறித்த தொழிலாளியின் உடலை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டுள்ள உடல், கடந்த வாரமே மீட்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதை எடுக்க முற்படும்போது, அது தவறி மேலும் சுரங்கத்துக்குள் விழுந்துவிட்டது. ஆனால், அந்த உடலை இன்று மீட்புப் படையினர் வெற்றிகரமாக எடுத்துள்ளனர்.
மேலும் சுரங்கத்தில் சிக்கிய ஏனைய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி ஜனிதா மலைத் தொடரில் உள்ள, சட்ட விரோத நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்து வந்த 15 தொழிலாளிகள் திடீர் நீர் வரத்துக் காரணமாக அதற்குள்ளேயே சிக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM