(ஆர்.விதுஷா)
நாட்டின் இரு வேறுபட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கைகள் நேற்று பொரளை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் இடம் பெற்றுள்ளதுடன், பெண்ணொருவர் உட்பட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொரளை பகுதியின் கல்கஹகும்புர பகுதியில் மேல்மாகாண ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 103 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் பொதைப்பொருளுடன் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 32வயதடைய இல 112 கல்கஹகும்புர , பேஸ்லையின் பாதை பொரளை பகுதியை சேர்ந்த முஹம்திரம்கே றுக்லந்தி எனப்படும் மாயா எனப்படுபவரென விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
அத்துடன். சந்தேக நபரை மாளிகாகந்தை நீதவான்நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேல்மாகாண ஊழல் தடுப்பு பிரிவினர் இன்றைய தினம் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னனெடுத்து வருகின்றனர்.
இதே வேளை , பதுளை பகுதியில் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 31வயதுடைய பதுளை பகுதியை சேர்ந்த ஜயசிங்கமான ஆராச்சிலாகே லக்ஷித்த னுவண் ஜயசிங்க எனப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 2கிராம் 750 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,சந்தேக நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM