எறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றுக்குள் இரவு வேளையில் திடீரென உட்புகுந்த இரு பெண்கள் அங்கிருந்த பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும், வீட்டின் ஜன்னல் மற்றும் பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு (22.01.2019) றிபாய் பள்ளியை அண்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் அவ்வீட்டிலிருந்த சுமார் 4 வயதுக் குழந்தை, அக்குழந்தையின் தாய் மற்றும் வீட்டின் கண்ணாடிகள், ஜன்னல்கள், சில பொருட்கள் என்பன தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த குழந்தையும் தாயும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூரின் மருதமுனையான கிராம நீதிமன்ற வீதியை அண்டி வசிக்கும் தாயும் மகளுமான இரு பெண்களே வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறே குறித்த தாக்குதலின் அடிப்படையாக அமைந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM