மீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை

Published By: Digital Desk 4

22 Jan, 2019 | 07:20 PM
image

இந்தியாவின் தமிழகத்தில் கணசனுக்கு  மீன் குழம்பு வைக்கவில்லை என்ற தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருச்சி கே.கே.நகர் உஸ்மான் அலி நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்த சுரேஷ், சொந்தமாக 2 லொரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா, பிள்ளைகள் ராகுல் மற்றும் உதயா, இவர்களுடன் சுரேஷின் தாயும் வசித்து வருகிறனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் மீன் வாங்கிக் கொடுத்துவிட்டு, மதியம் சமைத்து வைக்கும்படி கூறிவிட்டு சென்ற  பின்  பிள்ளைகளும் பாடசாலைக்கு சென்றுவிட அவரது தாயும், மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று பகல் குடிபோதையில் வீடு திரும்பிய சுரேஷ், மீன்குழம்பை ருசிக்க வேண்டும் என்ற ஆசையில் வீடு திரும்பினார்.

இதற்கிடையே சலவை இயந்திரம் பழுதாகிவிட துணிகளை கையால் துவைத்ததால் மீன் குழம்பு வைக்கத் தாமதமாகியுள்ளது என மனைவி கூற கோபத்தில் சுரேஷ் சண்டையிட, சத்யாவின் கன்னத்தில் அறைந்ததாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சத்யா வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு பற்றவைத்துள்ளார். உடனே சுரேஷ் தானும் தீக்குளிக்கப் போவதாக வம்பு செய்துள்ளார், கடும் ஆத்திரத்தில் இருந்த சத்யா, வீட்டின் கழிவறைக்கு சென்று உடலில் தீ வைத்துக் கொண்டார்.

தீ முழுவதும் பற்றிய நிலையில் சத்யா வெளியே ஓடி வர, சுரேஷ் காப்பாற்றுவதற்காக சத்யாவை தூக்கியுள்ளார்.

இதில் சுரேஷின் உடலிலும் தீப்பிடித்தது, இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு சுரேஷ் தாய் கதற அக்கம்பக்கத்தினர் உதவியுள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35