பாகிஸ்தானின், பலூசிஸ்தானில் பயணிகள் பஸ்ஸொன்றுடன் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு சுமார் 40 பயணிகள் மேற்படி பஸ்ஸுல் பயணித்துக் கொண்டிருந்தபோது பலூசிஸ்தானின், ஹப் அருகே, எதிரிபொருள் ஏற்றி வந்த லோறியொன்றுடன் மோதியுள்ளது.
இவ்வாறு மோதிய லொறியில் ஈரானிய டீசல் இருந்ததால் விபத்தின்போது பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பயணிகள் உயிரை காப்பாற்ற பஸ்ஸை விட்டு தப்பிக்க முயற்கிகளை மேற்கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை.
குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து 26 உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைப்பெற்று வருவதாகவும் லாஸ்பேலா துணை ஆணையாளர் ஷபீர் மெங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் 16 பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM