சிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது!

Published By: Vishnu

20 Jan, 2019 | 07:53 PM
image

சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வருகிறார்கள் என்பதும் அவர்கள் நேரடியாக சசிகலா அறைக்கு சென்றே 3-4 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளனர் என்பதும் தற்போது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

சிறையில் உள்ள சசிகலாவுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது தற்போது, தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து இந்திய தகவல் அறியும் சட்ட மூல ஆர்வலர் குறிப்பிட்டுள்ளதாவது,

சசிகலாவுக்கு சிறையில் 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறையில் எந்த கைதிகளுக்கும் உணவுகளை சமைக்க அனுமதி கிடையாது. அப்படியிருக்க சசிகலாவுக்கு சமையல் அறை மற்றும் சமைப்பதற்கு ஒரு பெண் கைதியும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறை அலுவலர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் கும்பலாக வருவதும், நேரடியாக அவரது அறைக்கு சென்று அவருடன் பேசுவதையும் வழமையாக கொண்டுள்ளனர்.

இதற்கு முன் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ் 2 கோடி (இந்திய ரூபா) லஞ்சம் பெற்றதாகவும், சிறை விதிகளை மீறி சசிகலாவுக்கு 4 விசேட அறைகள் ஒதுக்கப்பட்டதும், அவர்களுக்கு தனி சமையலறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததும், மற்ற கைதிகளுக்கு அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட சசிகலாவுக்கு அதிக அளவிலான பார்வையாளர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது போன்ற விதி மீறல்கள் நடந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விணய்குமார் தலைமையில் உயர்மட்டகுழுவை கர்நாடக அரசு நியமித்திருந்தது.

அதற்கிணங்க அந்த குழு இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிக்கை சமர்பித்திருந்தது. அந்த அறிக்கையின் தகவல்களே தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13