நகை கடைக்குள் நுழைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் ; பொலிஸாரின் பிடியிலிருந்து லாவகமாக தப்பி ஓட்டம்

Published By: Vishnu

20 Jan, 2019 | 08:53 AM
image

யாழ்.பிரதான வீதியில் நகை கடை ஒன்றுக்குள் புகுந்த குழு ஒன்று கடையின் உரிமையாளர், உரிமையாளரின் மனைவி மற்றும் மைத்துனன் ஆகியோரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு, பொலிஸாருடைய பிடியில் இருந்து லாவகமாக தப்பிச் சென்றிருக்கின்றது. 

நேற்று மாலை 6 மணியளவில் யாழ்.பிரதான வீதியில் நகை கடை ஒன்றில் நகை செய்ய கொடுத்த வாடிக்கையாளர்கள் சிலர் கடைக்கு வந்துள்ளனர். 

இதன்போது அவர்கள் செய்ய கொடுத்த நகையின் அளவு சற்று அதிகம் என்பதால் மேலதிகமாக இரண்டாயிரம் ரூபாய் பணத்தை செலுத்துமாறு கடையின் உரிமையாளர் கூறியுள்ளார். இதனையடுத்து கடையின் உரிமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த கும்பல் கடை உரிமையாளரையும், அவருடைய மனைவியையும் குரூரமாக தாக்கியுள்ளது. 

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த நகை கடை உரிமையாளரின் மைத்துனரையும் மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்தில் நின்றவர்களும், அங்கு வந்த இரு போக்குவரத்து பொலிஸாரும் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய முயற்சித்தனர். 

எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் பொலிஸாரையும் தாக்க முயற்சித்ததுடன், அங்கிருந்து லாவகமாக தப்பி சென்றனர். இந்த சம்பவம் இடம் பெற்று சுமார் 2 மணித்தியாலங்களாகியும் மேலதிக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. 

இதனால் அங்கு கடமையில் இருந்த 2 போக்குவரத்து பொலிஸாரால் நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்து குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. மேலும் தாக்குதல் நடத்திய கும்பல் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்த கடுமையாக முயற்சித்ததுடன், பொலிஸாருடைய பிடியை தட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08