மிருகபலி தடை உத்தரவுக்கு இந்து மாமன்றம் பாராட்டு

Published By: Robert

04 Apr, 2016 | 04:43 PM
image

ஆலயங்களில் மிருகங்களைப் பலியிட்டு வேள்வி நடத்துவதற்கு யாழ் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியதையிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இவ் உத்தரவானது. சைவ மதத்தின் உன்னத கொள்கையையும் ஆலயத்தின் புனிதத்தையும் மேம்படுத்த உதவுமென்பது எமது நம்பிக்கை என்று அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மன்றம் விடுத்துள் செய்தியில் கூறியுள்ளதாவது,

சமுதாயத்திலுள்ள இவ்வாறான மூடக்கொள்கைகளையும், மதத்திற்கு முரணான செயல்களையும் தடுக்கும் உரிமை நீதிமன்றங்களுக்கும் சமய அமைப்புக்களுக்குமே உரியதாகும். இவ்வகையில் நீதிமன்றத்தின் இத்தடையுத்தரவு மிகவும் போற்றுதற்குரியது.

எனினும் சமீபத்தில் யாழ் மாவட்டத்தின் சங்கானை மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேசங்களில் இவ்வாறான மிருகப்பலி நடைபெற்றதையிட்டு நாம் எமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

ஆலயங்களில் மிருகப்பலி இடுவதை எமது சமயம் இதுவரை அங்கீகரிக்கவுமில்லை எதிர்காலத்தில் அங்கீகரிக்கப்போவதுமில்லை. சகல உயிரினங்களும் ஆண்டவனின் குழந்தைகளென்றும், சகல உயிரினங்களுடனும் அன்பு பாராட்ட வேண்டுமென்றே எமது சமயம் போதிக்கின்றது. அவ்வகையில் மிருகப்பலிக்கெதிரான நீதிமன்றத்தின் தடையுத்தரவைத் தொடர்ந்து இந்து சமய கலாசாரத் திணைக்களம் விரைவில் இச்சட்ட வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துச் சட்டமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20