பெண்கள் அலுவலகத்திற்கு சென்றால் கணினி முன் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். காலையில் 9 மணிக்கு உட்கார்ந்தால் மதியம் ஒரு மணிக்கு மதிய உணவிற்கு எழுந்திருக்கிறார்கள்.
பிறகு பசியாறுவதற்கும் உட்கார்ந்து பசியாறிவிட்டு, பிறகு மீண்டும் கணினி முன் அமர்ந்து மோலை 5 மணி வரை வேலை செய்துவிட்டு, துதி சக்கர வாகனத்திலோ அல்லது பஸ்ஸிலோ உட்கார்ந்து கொண்டு வீட்டிற்கு பயணிக்கிறார்கள். வீட்டிற்கு சென்று, சோபா அல்லது நாற்காலியில் தொப்பென்று உட்கார்ந்து ரிவி, தொலைபேசி, ஃபேஸ்புக் என நேரத்தை உட்கார்ந்து கொண்டே செலவழித்துவிட்டு பிறகு மீண்டும் படுக்கைக்கு உறங்கச் சென்றுவிடுகிறார்கள்.
இதனால் உலகத்தில் நான்கில் ஒருவர் ஒரு நாளைக்கு எட்டுமணிநேரத்திற்கு மேல் உட்கார்ந்தேயிருக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு மனிதர்களின் ஆரோக்கியம் கேள்வி குறியாகிறது.
அதிலும் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்திற்கு மேல் அமர்ந்து வேலைசெய்பவர்கள், கேடராக்ட், டயாபடீஸ், க்ரானிக் லங் டீஸீஸ், கிரானிக் கிட்னி டிஸீஸ், ஆஸ்மா, அல்ஸைமர் உள்ளிட்ட ஏராளமான நோய்களின் பாதிப்பிற்கு ஆளாக நேரிடலாம். உடலுழைப்பு இயல்பான அளவை விட குறைவதாலும், உணவு பழக்கத்தை முற்றிலும் மாற்றியமைத்துக் கொண்டிருப்பதாலும் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
அதனால் இனிமேல் தொடர்ச்சியாக முப்பது நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் அமர்ந்திருக்க வேண்டாம். அரை மணி தியாலத்திற்கு ஒரு முறை எழுந்து ஒரிரு நிமிட நடைக்கு பின்னர் மீண்டும் அரை மணிநேரம் உட்கார்ந்து பணியாற்றலாம். இதனை கடைபிடித்தால் ஹோர்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டிலும் ஒரு சீரான தன்மை உருவாகும். ஆரோக்கியத்தை காக்கும். உயிரிழப்பிலிருந்து பாதுகாக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM