இரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து

Published By: Daya

17 Jan, 2019 | 05:07 PM
image

(ஆர்.விதுஷா)

கொள்ளுப்பிட்டி மற்றும்  வெலிகம ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள  இரண்டு புட் சிட்டி நிலையங்களில் இன்று காலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

 கொள்ளுப்பிட்டி, ஈ.ஆர்.ஏ. டிமெல் மாவத்தை  பகுதியில்   அமைந்துள்ள புட் சிட்டியில்  இன்று அதிகாலை  1.15 மணியளவில் திடீர்  தீப்பரவல்  ஏற்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து  விபத்து தொடர்பாக  கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய  தீயை கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவரும் முயற்சியில் தீயணைப்புப்படையினர்  ஈடுபட்டனர். 

இந்த நிலையில் தீயணைப்பு பணியில்  ஈடுபட்ட  தீயணைப்பு வீரர்கள்  இருவருக்கு  தீக்காயங்கள்  ஏற்பட்டுள்ளதோடு அவர்களின் கண்களும் பாதிக்கப்பட்டுள்ளன.  

தீக்காயங்களுக்குள்ளான  தீயணைப்பு  வீரர்கள்  இருவரும் கொழும்பு  கண் வைத்தியசாலையில்  அனுமதிக்கபட்டுள்ளதுடன் , தொடர்ந்தும் சிகிச்சை  பெற்று வருவதாக கொள்ளுப்பிட்டி  பொலிசார் தெரிவித்தனர் .  

மேலும்  ,  வெலிகம  -  காலி வீதியில்  அமைந்துள்ள  புட் சிட்டி வர்த்தக நிலையத்தில்  ஏற்பட்ட   தீவிபத்தின் காரணமாக  வர்த்தக நிலையத்தின் சொத்துக்களுக்கு  பாரிய சேதம்  ஏற்பட்டுள்ளது.

 இன்று   அதிகாலை  5.50 மணியளவில்  ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக  வர்த்தக நிலையத்தின்  காசாளர்  பிரிவு உட்பட  அதன் அருகிலிருந்த ராக்கை என்பன முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன்,  உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லையென  தெரியவந்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38