உலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள ஜிம் யாங் கிம், அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ள நிலையில் அவர் தனியார் உட்கட்டமைப்பு முதலீடு நிறுவனம் ஒன்றில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அடுத்து வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறித்த பதவிக்கு தமிழ்நாட்டில் சென்னையில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த பெண்ணான இந்திரா நூயி (வயது 63) பெயர் அடிபடுகிறது. இவர், குளிர்பான நிறுவனமான ‘பெப்சி’யின் தலைமை செயல் அதிகாரியாக 12 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி விலகினார்.
இவரது பெயரை உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இது குறித்த தகவல்களை ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
டுவிட்டரில் இவான்கா டிரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், இந்திரா நூயியை ‘வழிகாட்டி, உத்வேகம் தருபவர்’ என குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி இவான்கா டிரம்ப், அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீபன் மனுசின், வாஷிங்டன் வெள்ளை மாளிகை பணியாளர்களின் தற்காலிக தலைவர் மிக் முல்வானி ஆகியோர் மேற்பார்வையில் நடந்து வருவதாக ‘நியூயேரர்க் டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM