(ஆர்.விதுஷா)
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளின் காரணமாக வடபகுதி மீனவர்களின் வலைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
கடந்த 12 ஆம் 13 ஆம் திகதிகளில் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் 500 இற்கும் அதிகமான இந்திய படகுகள் அத்துமீறி நுழைந்தமை இலங்கை கடற்படையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு படகுகளில் இருந்த 9 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM