காணாமல்போன மலேசிய எம்.எச். 370 விமானத்தினுடையது என நம்பப்படும் சிதைவுகள் மொரிஷியஸின் கிழக்கேயுள்ள தீவொன்றில் கரையொதுங்கி யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொட்றிகுயஸ் தீவிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தவர்கள் இந்த சிதைவைக் கண்டுபிடித்து அது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
மலேசிய விமானசேவைக் குச் சொந்தமான மேற்படி போயிங் 777 விமானமானது 2014 ஆம் ஆண்டு 239 பேருடன் மாயமானது.
இந்நிலையில் மௌரூக் எபொனி ஹோட்டலில் தங்கியிருந்த ஜீன் டொமி னிக் மற்றும் சுஸி விட்றி ஆகியோர் இந்த சிதைவைக் கண்டு பிடித்து அது தொடர் பில் பிராந்திய அதிகாரிகளுக்கு அறிவித் துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன் மொஸாபிக் கடற்கரைப் பிராந்தியமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள் மலேசிய எம்.எச். 370 விமானத்துக்குரியன என அவுஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் டரென் செஸ்டர் கடந்த வாரமே உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM