இலங்கையின் சிரேஸ்டவீரர்களிற்கு பாலியல்ரீதியில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் சிலர் பின்னர் அதனை வைத்து அவர்களை அச்சுறுத்துவதுடன் ஆட்டநிர்ணய சதிக்கு பயன்படுத்துகின்றனர் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது
உலகின் பல பாகங்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் பயன்படுத்தும் இவ்வாறான தந்திரோபாயத்திற்கு இலங்கையின் சிரேஸ்ட வீரர்கள் பலியாகியுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை இளம் வீரர்கள் தொடர்ந்தும் அணியில் இடம்பெறவேண்டுமென்றால் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவேண்டும் என அதிகாரம் உள்ளவர்களால் மிரட்டப்படுகின்றனர் எனவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பல்வேறு மட்டங்களினான அணிகளில் விளையாடும் வீரர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர், என தெரிவித்துள்ள சண்டே டைம்ஸ் ஊழல் மற்றும் கொழும்பை சேர்ந்த பெண்ணொருவருடனான தொடர்புகள் குறித்து இவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
குறிப்பிட்ட பெண்மணி வீரர்களை தனது வலைக்குள் சிக்கவைத்த பின்னர் அவர்களை இந்தியாவை சேர்ந்த ஆட்டநிர்ணய சதி கும்பலை சேர்ந்தவர்களிற்கு அறிமுகப்படுத்துகின்றார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த சதிமுயற்சியில் தொடர்புபட்டவர்கள் குறித்த படவிபரங்களை வீரர்களிற்கு வழங்கியுள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM