இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையில் இன்று சிட்னியில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இந்நிலையில் நிர்ணைக்கப்பட்ட 50 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ஓட்டங்களையும், கவாஜா 81 பந்துகளில் 59 ஓட்டங்களையும், மார்ஸ் 70 பந்துகளில் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தியா அணியின் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 289 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
அந்த வகையில் தவான் டக் ஆட்டமிழந்து வெளியேற. அடுத்து வந்த அணி தலைவர் விராட் கோலி வெறும் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின் வந்த அம்பதி ராயுடு ஓட்டம் ஏதும் பெறவில்லை.
அதனையடுத்து ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் டோனி. இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில். அரை சதமடித்த டோனி 51 ஓட்டங்களுடன் வெளியேறியமை அதிர்ச்சியளித்தது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் ரோகித் சர்மா தனி ஒருவராகப் போராடி சதமடித்தார். இருப்பினும் கடைசியில் அவரது போராட்டம் வீணானது. அவர் 129 பந்துகளில் 6 ஆறு ஓட்டம், 10 நான்கு ஓட்டம் அடங்கலாக 133 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து இறுதிக்கட்ட விக்கெட்டுகளும் விரைவில் விழுந்தன.
இறுதியில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் அவுஸ்திரேலியா அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டும், ஜேசன் பெஹர்ண்டாப், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM