(ஆர்.விதுஷா)
ஆணைமடு- பூனவிட்டிய , ஆடிகம பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணெடுவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் தொடர்பாக நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆணைமடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
66 வயதுடைய பூனவிட்டிய - ஆடிகம பகுதியயை சேர்ந்த மோதா மேரிகந்ஹே ஞானவதி எனப்படும் பெண்ணெருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி பெண்ணின் சடலம் கழுத்து கம்பியால் இறுக்கப்பட்டு , கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், சடலம் காணப்பட்ட பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், ஆணைமடு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கமைய பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை நேற்றைய தினம் பொலிஸார் மேற்கொண்டனர்.
இதேவேளை உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நிலவுவதால் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் வெவ்வேறு கொணங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM