செயற்கைமுறைக் கருக்கட்டலின் பின்னர் தோன்றக்கூடிய கர்ப்பகால சிக்கல்கள்

Published By: Robert

03 Apr, 2016 | 02:04 PM
image

தம்­ப­திகள் வரு­டங்கள் பல சென்றும் கருத்த­ரிக்­க­வில்லை என்ற குறையில் பய­ணங் களை ஆரம்­பிக்­கின்­றனர். இந்த பயணத்தின் பாதையில் எத்­தனை தடை­களை தாங்க வேண்டி உள்­ளது? ஆரம்ப காலத்தில் இதற்­கான பயணம் இந்­தியா சென்று அங்கு மாத ங்கள் பல தங்­கி­யி­ருந்து சிகிச்­சை­களை பெற்­றனர்.

கர்ப்பம் தரிக்க தாம­த­மாகும் தம்­ப­தி­களை சிகிச்சையளித்து கருத்­த­ரிக்க வைப்­பது ஒரு சவா­லான விடயம். ஆனால் அதனைவிட சவா­லான விடயம் சிகிச்­சைகள் மூலம் தங்­கிய கருவை தக்க வைத்து கர்ப்ப காலத்தை பரா­ம­ரித்து அவர்­க­ளது கையில் ஆரோக்­கி­ய­மான குழந்­தையை பிர­ச­வித்துக் கொடுப்­பதாகும்.

இதனை தான் IVF கர்ப்பகால பரா­ம­ரிப்பு எனக்­கூ­று­கிறோம். (IVF PREGNANCY) கடந்த காலங்­களில் எமது மக்கள் இந்­தியா சென்று செயற்கை முறை கருக்­கட்டல் மூலம் கருத்­த­ரித்து பின்னர் அந்தக் கரு­வ­ளர்ந்து ஒரு குழந்­தை­யாக பிர­ச­விக்கும் வரை உள்ள கர்ப்ப காலம் முழு­வ­துமே இந்­தி ­யாவில் தங்­கி­யி­ருந்து பின்னர் கையில் ஒரு குழந் தையை தூக்கிக் கொண்டே நாடு திரும்­பி­னார்கள்.

இந்த 10 மாத கர்ப்ப காலம் தம்­ப­தி­களைப் பொறுத்­த­வரை எந்த அளவு ஏக்­கமும் அச்­ச மும் நிறைந்த காலம் என அவர்­களை கேட் டால் தெரியும். இதனை அனு­ப­வித்­த­வர்கள் இதன் வேத­னையை சொல்லி இன்­னொ­ரு­வ­ருக்கு புரியவைக்க முடி­யாது.

இவ்­வாறு கருத்­த­ரிக்க பல மாதங்கள் இந்­தி­யாவில் தங்கி, பின்னர் கர்ப்ப காலத்தை தொடர இந்­தி­யாவில் தங்கி, தொடர்ந்து பிர­ச­வித்த குழந்­தையை சில மாதங்கள் அங்கு பரா­ம­ரித்து பின்னர் நாடு திரும்­பு­வது என்­பது பல மாதங்கள் நிறைந்த காலமா? இல்லை. ஓரிரு வரு­டங்­களே போய்­விட்­டன.

இந்த நீண்டகாலம் இந்­தி­யாவில் சிகிச்­சைக்­கெனத் தங்கும்போது இதற்­கான செல­வுகள் ஒரு புறம் இருக்க இந்த நீண்ட காலம் கணவன் – மனைவி அங்கு தங்­கி­யி­ருக்கும் போது அவர்­க­ளது வேலை­வாய்ப்­புக்கள், தொழில் என்­ப­வற்­றைக்­கூட இழக்­கின்­றனர்.

பல சந்­தர்ப்­பங்­களில் இந்த நீண்டகால லீவு­க­ளினால் தமது வேலை­வாய்ப்பை நிரந்­த­ர­மாக இழக்கும் பரி­தாபம் ஏற்­ப­டு­கின்­றது. செல­வுகள் பல நிறைந்த இக்­கால கட்­டத்தில் வேலை வாய்ப்பை இழப்­பதும் வரு­மானம் இல்­லாமல் வாழ்­வதும் எங்கு போய் சொல்­வது.

இத்­தனை சோகங்­க­ளையும் தமது மனதில் தாங்­கிக்­கொண்டு பிறக்­கப்­போகும் தமது குழந்­தைக்­காக அவர்கள் ஆவ­லு­டனும் அவ­தா­னத்­து­டனும் இருப்­பது மிகவும் கடி­ன­மா­னதும் அதே­வேளை ஒரு பாராட்­டப்­ப­டக்­ கூ­டி­ய­து­மான விட­ய­முமாகும்.

இவ்­வாறு எமது மக்கள் அங்கும் இங்­கு­மாக இன்­னல்­க­ளுடன் வாழும் போது நாம் அவற்றை கேள்­விப்­ப­டு­வ­துடன் விட்டு விட முடி­யுமா? இந்­தத்­து­றையில் நிபு­ணத்­துவம் பெற்ற நாம், நமது மக்­க­ளது இன்­னல்­க­ளு க்கு விடிவு காண்­பது தான் முதல் கடமை.

ஆகையால் அவர்­க­ளது செல­வி­னங்­களை குறைக்குமுக­மா­கவும் அவர்­க­ளது விடு­மு­றைகள் மற்றும் இந்­தி­யாவில் தங்க வேண்­டிய காலங்­களை குறு­கி­ய­தாக்­கு­வ­தற்­கா­கவும் நாம் என்ன செய்­யலாம் என நினைத்தால் அதற்கு விடை என்ன?

இவ்­வாறு செயற்கை முறையில் அங்கு IVF முறையில் கருத்­தங்­கி­ய­வர்கள் அடுத்­த­தாக பிர­சவம் வரை இந்­தி­யா­வி­லேயே தங்க வேண்­டுமா? அல்­லது தமது நாடு திரும்பி கர்ப்­ப­கா­லத்தை சொந்த நாட்­டி­லேயே பரா­ம­ரித்து பிர­ச­வத்­தையும் தமது நாட்­டி­லேயே பார்க்க முடி­யுமா? என்ற தீர்­மா­னத்தை முடிவு செய்ய வேண்­டிய இக்­கட்­டான நிலையில் இருக்­கின்­றனர்.

இந்த முக்­கிய முடிவை எடுப்­ப­தற்கு பதி­ லாக நாம் அண்­மைக்­கா­ல­மாக IVF முறை யில் இந்­தி­யாவில் கருக்­கட்­டிய தம்­ப­தி­கள் சில மாதங்­களில் நாடு திரும்­பி­யதும் அவர்­க­ளது கர்ப்­ப­கா­லத்தை கண்ணும் கருத்­து­மா­கவும் பரா­ம­ரித்து சவால்­க­ளையும் சோத­னை­க­ளையும் தாண்டி ஆரோக்­கி­ய­மான குழந்­தையை பிர­ச­வித்துக் கொடுப்­பது ஒரு ஆதா­ர­மாக உள்­ளது.

இதன் மூலம் நன்மையடை­வது தம்­பதி கள். அவர்கள் சிலர் மூன்று மாத கர்ப்ப காலத்­திலும் சிலர் நான்கு ஐந்து மாத கர்ப்ப காலத்­திலும் நாடு திரும்­பு­கின்­றனர். இவர்­களில் சிலர் இரட்டைக் குழந்­தை­களையும் தாங்கி வரு­கின்­றனர்.

இந்தக் கர்ப்ப காலத்தில் வரக்­ கூ­டியசிக் கல்கள் எவை என்று இப்­போது பார்ப்போம். கர்ப்ப காலத்தில் குருதி அமுக்கம் அதி­க­ரிக்கத் தொடங்கும். அதனை சரி­யாக கையாண்டு கர்ப்­ப­ காலத்தை தொடர வேண்­டியி­ருக்கும். இதனை விட மிகவும் சோத­னை­யான விடயம் இந்த IVF கர்ப்ப காலத்தில் சீனியின் அளவு அதி­க­ரித்து கர்ப்­ப­கால நீரி­ழிவு நோய் ஏற்­ப­டு­கின்­றது.

இதன்­போது சரி­யான உணவுப் பழக்­கத்­தாலும் இன்­சுலின் ஊசி­யாலும் சீனியின் அளவை சரி­யாகக் கட்­டுப்­ப­டுத்தி கர்ப்ப காலத்தை வென்­றெ­டுக்க வேண்டி உள்­ளது.

அடுத்து வரும் சிக்கல் கர்ப்­பத்தில் வரும் சிசு வளர்ச்சி குறை­யக்­கூ­டிய சந்­தர்ப்பம் உள்­ளது. இதனை நாம் ஒழுங்­கான ஸ்கான் பரி­சோ­த­னைகள் மூலம் தகுந்த தரு­ணத்தில் கண்­ட­றிந்து பிரச்­சி­னைக்கு உரிய நேரத்தில் மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அதேபோல் சில குறை­மாதப் பிர­சவ வலி ஆரம்­பிக்க வாய்ப்­பி­ருப்­பதால் அத­னையும் கண்­ட­றிந்து கர்ப்ப காலத்தை தொடர வைப்­ப­தற்­கான சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது.

மேலும் சிலரில் குறைமாதத்தில் பன்னீர்க் குடம் உடைந்து போனால் அதற்குரிய பராமரிப்பை செய்து சிசுவை காப்பாற்றுவது அவசியம்.

இவ்வாறு செயற்கை முறைக்கருக் கட்ட லின் (IVF) பின்னர் தோன்றக்கூடிய கர்ப்ப கால சிக்கல்களை உடனுக்குடன் கண்டு பிடித்து அதற்குரிய பாராமரிப்புக்கள், சிகிச் சைகளை வழங்கி கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியத்தையும் பிறக்கும் சிசுக்களின் ஆரோக்கியத்தையும் பேணவேண்டியது எமது கடமையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04