இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.
பொலிவூட் சினிமா பட இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது அவர்கள் இருவரம் பெண்கள் தொடர்பில் உரையாற்றுகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதுடன் பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர்.
இதற்கு கடும் கண்டனம் எழுந்ததுடன், கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இவ் விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இருவரும் இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு விடுத்தது.
இந் நிலையில் என்னுடைய கருத்துகள் எந்த வகையிலாவது யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று பாண்டியா கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM