(எம்.ஆர்.எம்.வஸீம்)
அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதனால் மேல்மாகாண பாடசாலைகளை முன்னேற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் 8ஆவது ஆளுநராக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் இன்று தனது கடமையை ராஜகிரியவில் அமைந்துள்ள ஆளுநர் பணிமனையில் கடமையை பொறுப்பேற்றார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மாகாண ஆளுநர்கள் மற்றும் மாகாணசபை முதலமைச்சர்கள் இணக்கப்பாட்டுடன் இணைந்து செயற்பட்டால்தான் அந்த மாகாண மக்களின் தேவைகளை மேற்கொள்ளமுடியும். என்னை பொறுத்தவரையில் நான் எப்போதும் சத்தியத்துக்காக குரல் கொடுத்து வருபவன். அதனை மேல் மாகாண முதலமைச்சருடன் இணைந்து செய்யமுடியுமானால் அதற்கும் நான் தயாராகவே இருக்கின்றேன்.
மேலும் மாகாண ஆளுநர் வாசஸ்தலமானது அந்த மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றும் இடமாகும்.அதனால் மேல் மாகாண ஆளுநர் வாசஸ்தலத்தில் அரசியல் செய்ய இடமளிக்கமாட்டோம்.
இந்த இடத்துக்குவரும் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வது எனது கடமையாகும். இதன்போது கட்சி பேதம் பார்க்கமுடியாது. அதனை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு நான் செயற்பட்டதும் இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM