9 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை : பதுளையில் பதிவான மிக கொடூரமான சம்பவம்

Published By: R. Kalaichelvan

09 Jan, 2019 | 12:59 PM
image

பெண் ஒருவரின் மகளை நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவமொன்று பதுளை ஹாலி-எல பகுதியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் தாய் கருத்து தெரிவிக்கையில்,

எனது இரத்த உறவு முறையிலான உறவினர் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகி  நான் கர்ப்பமடைந்தேன்.

எனக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையின் பெயர் டிலானி. எனது குழந்தை எட்டு வயதையடைந்த போது, நான் மறுமணம் செய்துகொண்டேன்.

இந்நிலையில் எனது மகள் ஒன்பது வயதையடைந்த போது, எனது கணவர் மகளை பாலியல் துஷ்பிரயோம் செய்து கொலை செய்துவிட்டார் என்றார்.

ஹாலி - எலை பகுதியின் மாத்தன்னை பெருந்தோட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் டிலானி என்ற ஒன்பது வயது நிரம்பிய சிறுமியின் மரணம் குறித்து சிறுமியின் தாயும் தாயின் கணவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டபோதே சிறுமியின் தாய் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி (05.01.2018) புதைக்கப்பட்ட ஒன்பது வயது நிரம்பிய சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து சட்டபூர்வ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் சிறுமியின் தாயையும் தாயின் கணவரையும் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தும்படியும் பதுளை மஜிஸ்திரேட் நீதிபதி எச். பி. சி. பீ. கருணாதாச உத்தரவிட்டிருந்தார். 

இவ் உத்தரவிற்கமைய ஹாலி - எல பொலிசார் இறந்த சிறுமியின் தாயையும் தாயின் கணவரையும் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

டிலானியான  சிறுமியின் மரணம் இயற்கை மரணமல்ல, கொலை செய்யப்பட்ட பின்னரே சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டிருக்கின்றதென்று ஒரு வருடத்தின் பின்னர் சிறிய தாயார் உள்ளிட்ட உறவினர்கள் ஹாலி - எல பொலிஸ் நிலையத்தில் 06.01.2019 இல் முறைப்பாடு செய்திருந்தனர்.

இம்முறைப்பாட்டையடுத்தே, பதுளை மஜிஸ்திரேட் நீதிபதி, சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து சட்டபூர்வ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி ஹாலி - எல பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

சிறுமியின் சடலம் மேற்குறிப்பிட்ட குடியிருப்புத் தொகுதியின் வீட்டுத் தோட்டத்திலேயே இரகசியமாக புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இடத்தை ஹாலி - எல பொலிசார் சடலம் தோண்டி எடுக்கும் வரை பூரண பாதுகாப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில், வவுனியா செட்டிகுளத்திலிருந்து மாத்தன்னை பெருந்தோட்டத்தில் வாழ்ந்து வந்த பூபாலன் ஜானகி என்ற 28 வயது நிரம்பிய சிறுமியின் தாயும் தாயின் இரண்டாம் தார கணவனான 31 வயது நிரம்பிய மகேந்திரனுமே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53