இரு பிள்ளைகளின் தாய் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Published By: R. Kalaichelvan

22 Jan, 2019 | 11:17 AM
image

லுணுகம்வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படவ்கம பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வெட்டுகாயங்களுடன் இருந்த பெண்ணை லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளாக வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது.

படவ்கம, உனாதுவெவ பகுதியை சேர்ந்த 30  வயது மதிக்கத்தக்க  பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக தனது இரு பிள்ளைகளுடன் கடந்த சில மாதங்களாக தனது தாய் வீட்டில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி தன்னுடைய கணவன் தனது இரு பிள்ளைகள் குறித்த அக்கறை இல்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

இதற்கமைய சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08