அடிப்படை உரிமையை பாதுகாக்க போராடும் சட்டத்தரணிகளை சிறுமைப்படுத்தாதீர்கள்

Published By: Daya

04 Jan, 2019 | 04:53 PM
image

தன்னை நம்பி நாடிய ஒரு பிரஜையின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக பொலிஸார் உட்பட அதிகார சக்திகளுடன் முரண்படுவதற்கும், மோதுவதற்கும் துணியும் சட்டத்தரணி எவரையும் பாராட்டா விட்டாலும், சிறுமைபடுத்தும் விதத்தில் செய்திகளை உருவாக்கி வெளியிடுவது நீதியானது அல்ல என யாழில். உள்ள சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவர் ஊடகங்களிடம் கோரியுள்ளார். 

அண்மையில் யாழில் உள்ள முன்னணி சட்டத்தரணிகளில் ஒருவரான சர்மினி விக்னேஸ்வரன் சந்தேக நபர் ஒருவரை நீதிமன்றில் சரணடைய வைத்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கையில், 

குறிப்பாக குற்ற வழக்கு ஒன்றில் பொலிஸாரினால் தேடப்படும் சந்தேக நபர் ஒருவர் நீதிவானிடம் நேரடியாக சரணடையும் உரிமை உள்ளது. சட்டத்தரணிகள் ஊடாக சந்தேக நபர் சரணடைவதை ஏற்பதோ அல்லது மறுப்பதோ நீதவானின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டால் தான் தாக்கப்பட்டு அல்லது சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற கரணமாகவே சட்டத்தரணிகள் ஊடாக சந்தேக நபர்கள் நீதிமன்றில் சரணடைகின்றனர். இந்த நடைமுறை மிக நீண்ட காலமாகவே உள்ளது. 

ஆனால் ஒரு குற்றம் தொடர்பில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டியிருந்தால் சரணடையும் சந்தேக நபரை பொலிஸில் ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட சட்டத்தரணிக்கு நீதவான் அறிவுறுத்தல் வழங்க முடியும். அவ்வறிவுறுத்தலை சட்டத்தரணிகள் நடமுறைப்படுத்த வேண்டும்.

பொலிஸ் நிலையங்களில் குற்ற விசாரணைகளின் போது சந்தேக நபர்களின் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டமை தொடர்பான ஏராளமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறு பதிவான சம்பவங்கள் மீதான சட்டத் தீர்ப்புகள் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் அண்மைக்காலம் வரையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் தன்னை நம்பி நாடிய ஒரு பிரஜையின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக பொலிஸார் உட்பட அதிகார சக்திகளுடன் முரண்படுவதற்கும், மோதுவதற்கும் துணியும் சட்டத்தரணி எவரையும் பாராட்டா விட்டாலும், சிறுமைபடுத்தும் விதத்தில் செய்திகளை உருவாக்கி வெளிவருவது நீதியானது அல்ல என கவலை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56