(ஆர்.விதுஷா)
உடதும்பறை பொலிஸ் பிரிவுக்குட்பட பகுதியில் இளைஞரொருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உன்னஸ்கிரிய- நுகேதென்ன பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் இளைஞரொருவரே இவ்வாறு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 6மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் 25 வயதுடைய இல 330-பீ ஹன்னஸ்கிரிய பகுதியை சேர்ந்த கபுகொடுவே கெதர சம்பத் குமார எனப்படுபவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேற்படி நபர் தனது தலைப்பகுதியிலேயே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
மேலும் , உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
அதேவேளை தற்கொலைக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் உடதும்பறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM