(எம்.ஆர்.எம்.வஸீம்)
அழுத்தங்களில் இருந்து தப்பிக்கொள்ள தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்வாகும். என்றாலும் அரசாங்கம் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஆரம்ப கட்டமாகவே ஜனவரிமுதல் ஊடகங்களை கட்டுப்படுத்துவதாக பிரதமர் தெரிவித்திருக்கின்றார் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
அரசாங்கம் தேர்தலுக்கு செல்லாமல் எப்படியாவது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றது.
மேலும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அண்மையில் மாவனெல்லையில் இடம்பெற்ற சம்பவமும் அரசாங்கத்தின் சதித்திட்டமாகவும் இருக்கலாம். அத்துடன் ஊடகங்களை அடக்கவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனவரியில் இருந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
எனவே அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் சதித்திட்டங்களை மறைக்கவே ஆரம்பமாக ஊடகங்களை அடக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM