அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள அரசாங்கம் சதி முயற்சி - வாசுதேவ நாணயக்கார

Published By: Vishnu

31 Dec, 2018 | 02:49 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அழுத்தங்களில் இருந்து தப்பிக்கொள்ள தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்வாகும். என்றாலும் அரசாங்கம் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஆரம்ப கட்டமாகவே ஜனவரிமுதல் ஊடகங்களை கட்டுப்படுத்துவதாக பிரதமர் தெரிவித்திருக்கின்றார் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அரசாங்கம் தேர்தலுக்கு செல்லாமல் எப்படியாவது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றது.

மேலும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அண்மையில் மாவனெல்லையில் இடம்பெற்ற சம்பவமும் அரசாங்கத்தின் சதித்திட்டமாகவும் இருக்கலாம். அத்துடன் ஊடகங்களை அடக்கவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனவரியில் இருந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார். 

எனவே அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் சதித்திட்டங்களை மறைக்கவே ஆரம்பமாக ஊடகங்களை அடக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55