வேட்டைக்கு சென்ற இருவரில் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததினால் நபர் ஒருவர் பலியான சம்பவம் ஹந்தபானகல காட்டுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம், புத்தலைப் பகுதியின் ஹந்தபானகல காட்டுப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
புத்தலையைச் சேர்ந்த 53 வயது நிரம்பிய ஆரியபால என்ற நபரே குறித்த சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து புத்தலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சடலத்தை மீட்டு, புத்தலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததோடு, தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலில், பலியானவரின் நண்பனும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் விசாரணைக்குற்படுத்தப்பட்ட போது, நண்பனுடன் மிருக வேட்டைக்கு காட்டிற்கு சென்ற போது, தவறுதலாகவும் எதிர்பாராதவிதமாகவும் துப்பாக்கி வெடித்ததில், நண்பர் பலியானாரென்று, பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM