வேட்டைக்கு சென்ற நபர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலி

Published By: R. Kalaichelvan

27 Dec, 2018 | 12:25 PM
image

வேட்டைக்கு சென்ற இருவரில் ஒருவரின்  துப்பாக்கி தவறுதலாக வெடித்ததினால் நபர் ஒருவர் பலியான சம்பவம் ஹந்தபானகல  காட்டுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம், புத்தலைப் பகுதியின் ஹந்தபானகல காட்டுப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

புத்தலையைச் சேர்ந்த 53 வயது நிரம்பிய  ஆரியபால என்ற  நபரே குறித்த சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து புத்தலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சடலத்தை மீட்டு, புத்தலை  வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததோடு, தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலில், பலியானவரின் நண்பனும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் விசாரணைக்குற்படுத்தப்பட்ட போது, நண்பனுடன் மிருக வேட்டைக்கு காட்டிற்கு சென்ற போது, தவறுதலாகவும் எதிர்பாராதவிதமாகவும் துப்பாக்கி வெடித்ததில், நண்பர் பலியானாரென்று, பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18