இந்தோனேசியா சுனாமியில் சிக்கி உயிரிழந்தோரின் தொகை  373 ஆக உயர்வு

Published By: Vishnu

25 Dec, 2018 | 11:50 AM
image

கடந்த சனிக்கிழமை இந்தோனேஷியாவைத் தாக்கிய சுனாமிப் பேரலையால் உயிரிழந்தவர்களின் தொகை 373 ஆகவும், காயமடைந்தவர்களின் தொகை 1459 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

அனக் கிரகட்டாவ் எரிமலைக் குமுறலையடுத்து கடலுக்குள் ஏற்பட்ட மண்சரிவுகளால் மேற்படி சுனாமிப் பேரலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் கிரகட்டாவ் எரிமலை தொடர்ந்து குமுறி வருவதால் பிறிதொரு சுனாமிப் பேரலை அனர்த்தம் ஏற்படுதவதற்கான வாய்ப்புள்ளதாக தேசிய அனர்த்த முகவர் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த சுனாமித் தாக்கம் காரணமாக இதுவரை 373 பேர் உயிரிழந்ததுடன், 1459 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 128 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் மீட்புப் படையினர் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52