மக்களை வறுமையிலிருந்து விடுவித்து  சிறந்ததோர் வாழ்க்கை கொடுங்கள் - பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை 

Published By: Vishnu

21 Dec, 2018 | 02:44 PM
image

(எம்.மனோசித்ரா) 

நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கை நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அனைத்து ஆட்சியாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கொழும்பு பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நத்தார் விழா பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோர் தலைமையில் நேற்று  ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் உரையாற்றிய ஆண்டகை, 

இங்கு விசேட உரை நிகழ்த்திய கொழும்பு பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உண்மையான நத்தார் என்பது உண்டு களித்து மகிழ்வது மட்டுமல்லாது, வறிய மக்களின் துயரங்களை புரிந்துகொண்டு அவர்களது பசியை போக்குவதற்காக ஒன்றுபடுவதாகுமெனக் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கை நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அனைத்து ஆட்சியாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியமாகும் என தெரிவித்தார். 

இந்த நத்தார் விழாவில் இலங்கைக்கான திருத்தந்தையின் பிரதிநிதி பியரே நுயன் வென் டொட் ஆயர் உள்ளிட்ட அருட் தந்தைகள் மற்றும் அருட் சகோதரிகள், சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் ஜோன் அமரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08