முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் அரச மற்றும் காணிகள் விடுவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் முல்லைத்தீவு படைத்தளபதி மேஜர் ஜென்ரல் துஸ்யந்த ராஜ குருவினால் கையளிக்கப்பட்டது.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரின் பயன்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிககப்பட்டுள்ளன.
இவ்வாறு விடுவிக்கப்படுகின்ற காணிகளுக்கான ஆவணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் நத்தார் தின நிகழ்வும் நேற்று மாலை 7 மணிக்கு முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.
விசேட ஆராதனைகளுடன் ஆரம்பமான நத்தார் தின நிகழ்ச்சியினை யடுத்து காணிகள் கையளிக்கப்பட்டன விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான ஆவணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் மாவட்ட வனவள அதிகாரி ஆகியோரிடம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் முல்லைத்தீவு படைத்தளபதி மேஜர் ஜென்ரல் துஸ்யந்த ராஜ குரு கையளித்துள்ளார்
அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை பகுதியில் ஆறு ஏக்கர் தனியார் காணியும் சிலாவத்தை பகுதியில் ஒரு ஏக்கர் தனியார் காணியும் உப்புமாவெளியில்; 10 .0;5 ஏக்கர் தனியார் காணியும் செம்மலைப்பகுதியில் 10 ஏக்கர் தனியார் காணியும் கோம்பாவில் பகுதியில் மூன்று ஏக்கர் காணியும் வள்ளிபுனம் பகுதியில் இரண்டு ஏக்கர் காணியும் புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதியில் ஒரு ஏக்கர் காணியும் உள்ளடங்கலாக 52. 14ஏக்கர் காணி நேற்று படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM