(ஆர்.விதுஷா)
வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 263.55 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மந்தப்பட்ட தரப்பிற்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய அரச மற்றும் தனியாருக்கு சொந்தமான சுமார் 263.55 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரிடமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன.
அதற்கமைய 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் சுமார் 84523.84 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் இராணுவத்தினர் வசம் காணப்பட்டன. அதன் பின்னர் 2018 நவம்பர் 25 ஆம் திகதி ஆகும் போது இராணுவத்தினர் வசம் காணப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் அளவும் 66754.59 ஏக்கர்களாக பதிவாகியுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM