பாதாள உலகத்தினருக்கு துப்பாக்கி விநியோகித்த இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்

Published By: R. Kalaichelvan

15 Dec, 2018 | 03:02 PM
image

பாதாள உலகைச் சேர்ந்த மூவருக்கு இராணுவ முகாமிலிருந்த துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்களுக்கு பயன்படுத்தப்படும் பெருந்தொகையிலான சன்னங்களை வழங்கிய இராணுவ கட்டளை அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் நீதிபதி அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

சியாம்பலாண்டுவை நீதவான் நீதிபதி நிலந்த விமலரட்ண முன்னிலையில் இராணுவ மேஜரான கட்டளை அதிகாரியை சியாம்பலாண்டுவை பொலிஸார் ஆஜர் செய்திருந்தனர்.

அவ்வேளையில் நீதிபதி அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து பொலிஸார் தொம்பகாவெலயின் ஆடம்பர வீடொன்றினை சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர். 

அவ்வேளையில் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட மூவரைக் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து அவர்களின் உடமைகளை சோதனையிட்ட பொலிஸார் ரி - 56  ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 2997 சன்னங்களையும்  3.8 மில்லி மீற்றர்களைக் கொண்ட ரிவோல்வர்களுக்கு பயன்படுத்தப்படும் 32 சன்னங்களையும் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது பெருந்தொகையான சன்னங்களை இராணுவ மேஜரான கட்டளை அதிகாரியிடம் தாம் பெற்றதாகக் கூறியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவர் ஏற்கனவே சியம்பலாண்டுவை நீதவான் நீதிபதி நிலந்த விமலரட்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கியதோடு எதிர்வரும் 26 ஆம் திகதி சியம்பலாண்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

குறித்த மூவரை தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது குறித்த மூவரும் நாட்டின் பல பொலிஸ் நிலையங்களில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளிகள் என்றும் இவர்கள் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சியம்பலாண்டுவைப் பொலிஸார் தொடர்ந்தும் தீவிர புலன்விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27