கடலுக்குச் சென்ற இரு மீனவர்களை இருநாட்களாக காணவில்லை

Published By: R. Kalaichelvan

14 Dec, 2018 | 11:26 AM
image

அம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை சேரவில்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.கடந்த புதன்கிழமை (12-12-2018) பிற்பகல் 5 மணிளவில் ஒலுவில் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகு ஒன்றில் சென்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய எம்.எஸ்.சஹாப்தீன் மற்றும் 32 வயதுடைய ஏ.எம்.அப்துல் கணி ஆகிய இரு மீனவர்களே இவ்வாறு காணமால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்துறை முகத்திலிருந்து சிறிய படகு மூலம் மீன்பிடிக்கச் செல்பவர்கள் மறுநாள் காலை கரை திரும்புவதே வழமையாக இருந்த போதிலும் இவர்களது வருகை தாமதமடைந்த அடுத்து வியாழக்கிழமை(13-12-2018) பகல்வேளையில் உறவினர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்ட போது தங்களது படகின் இயந்திரம் இயங்காமலுள்ளது என்றும் கடும் காற்று அடிப்பதாகவும் கூறியதாக தெரிவிக்கின்றனர். 

அன்று மாலை வரை குறித்த இருவரும் கரைசேராத போது மீண்டும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட வேளை தொலைபேசி இயங்கவில்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.  காணாமல் போயுள்ள மீனவர்களை தற்போது தேடும் பணியில் இராணுவத்தினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் மற்றும் கடற்படையினர் இல்லாத நிலையில் துறைமுகத்தின் படகு வாயில் பகுதி மணலால் மூடப்பட்டு பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வானிநிலை அவதான நிலையம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியனவற்றினால் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக எதிர்வரும் 16 அம் திகதிவரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலையும் பொருட்படுத்தாமல் கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் செல்வது பெரும் ஆபத்தான நிலைமையை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04