பாகிஸ்தானின் லாகூர் நகரில் சனசந்தடி மிக்க பூங்காவொன்றில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு அந்நாட்டு தலிபான் தீவிரவாத குழுவின் பிரிவான ஜமாத் உல் – அஹ்ரார் உரிமை கோரியுள்ளது.
மேற்படி தாக்குதலில் பெருந்தொகையான சிறுவர்கள் உட்பட குறைந்தது 72 பேர் பலியாகியுள்ளதுடன் 300 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பூங்காவில் உயிர்த்த ஞாயிறு தினத் தைக் கொண்டாடிய கிறிஸ்தவர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஜமாத் உல் – அஹ்ரார் தெரிவிக்கிறது.
அதேசமயம் பாகிஸ்தானிய பொலிஸார் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தெரிவிக் கையில், அது தொடர் பில் தாம் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருவதாக கூறுகின்றனர்.
குண்டு வெடிப்பையடுத்து சின்னாபின்னமாக சிதறிக் கிடந்த சடலங்களுக்கிடையே தமது பிள்ளைகளை பெற்றோர் பரிதவிப்புடன் தேடிய காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிய ஜனாதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிராந்திய அரசாங்கம் 3 நாள் துக்க தினத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
மேற்படி தாக்குதல் குறித்து ஜமாத் உல் – அஹ்ராரின் பேச்சாளர்களில் ஒருவரான எஹ்ஸகுல்லாஹ் எஹ்ஸன் விபரிக்கையில், “இந்தத் தாக்குதல் மூலம் நாம் லாகூர் நகருக்குள் பிரவேசித்து விட்டோம் என்ற செய்தியை பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்று கூறினார்.
அத்துடன் அந்நாட்டில் மேலும் தாக்குதல்களை நடத்தப் போவதாக அவர் அச்சுறுத்தல் விடுத்தார்.
மேற்படி தாக்குதலில் உயிரிழந்த அப் பாவி மக்கள் தொடர்பில் அனுதாபத்தை வெளியிட்டுள்ள நவாஸ் ஷெரீப், பிரித் தானியாவுக்கு மேற்கொள்ளவிருந்த தனது சுற்றுப் பயணத்தை பிற்போட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM