தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது புகைப்படம் எடுக்கையில் கணவர் கண் முன்னே புதிதாய்த் திருமணம் செய்துகொண்ட பெண் பள்ளத்தில் விழுந்து மரணமடைந்த சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
கேப் டவுன் நகரில் கடந்த ஞாயிறன்று தமது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் புதுமணப் பெண்ணான ஜொலண்டி. இவர், தமது கணவருடன் இணைந்து கேப் டவுன் நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது வித்தியாசமான கோணத்தில் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ள ஆசைப்பட்ட ஜொலண்டி, தமது கணவரை புகைப்படம் எடுக்க பணிந்துள்ளார்.
ஆனால் சம்பவத்தின்போது கால் தவறிய ஜொலண்டி அப்பகுதியில் உள்ள 500 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.
இச்சம்பவத்தில் பதறிப்போன அவரது கணவர் ஆண்ட்ரூ விபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்றும் நோக்கில் அந்த பள்ளத்தில் இறங்கியுள்ளார்.
இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர், ஜொலண்டியின் உடல் சிக்கியிருக்கும் பகுதிக்கு 9 மீற்றர் தொலைவில் எதுவும் செய்ய முடியாத தவிப்பில் ஆண்ட்ரூ நின்றிருப்பதை கண்டுள்ளனர்.
மீட்பு குழுவினர் சுமார் 3 மணி நேரம் கடுமையாக போராடி ஜொலண்டியின் சடலத்தை அங்கிருந்து மீட்டுள்ளனர்.
மேலும் ஆண்டு செப்டம்பர் மாதமே ஆண்ட்ரூ மற்றும் ஜொலண்டி ஆகிய இருவரின் திருமணம் நடந்துள்ளமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM