டயர் வெடித்ததால் விபத்துக்குள்ளான கார் ; மயிரிழையில் உயிர் தப்பிய வைத்தியர் 

Published By: Digital Desk 4

06 Dec, 2018 | 05:34 PM
image

மட்டக்களப்பு – கொழும்பு நெடுங்சாலையில் சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் இன்று பகல்  இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி வைத்திய அதிகாரி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கே. சுகுமார் பயணம் செய்த காரின் சில்லு வெடித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கிலிருந்த மரத்தில் மோதி நின்றுள்ளது.

இந்த விபத்து இடம்பெற்றவுடன் காரில் பொருத்தப்பட்டிருந்த காற்றழுத்த பை (Air bag) கணப்பொழுதில் சுயமாக இயங்கியதால் தான் எதுவித காயங்களோ உயிராபத்தோ இன்றி காப்பாற்றப்பட்டதாக வைத்தியர் தெரிவித்தார்.

எனினும் விபத்தில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வைத்தியர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் கடமை முடிந்து மட்டக்களப்பு நகரிலுள்ள தனது வீடு நோக்கிச் செல்லும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02