நீதிமன்ற தீர்பினால் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பேச்சுவாரத்தையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
குறித்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எதிர் கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சித்தார்தன் உட்பட நானும் கலந்துகொண்டிருந்தேன்.
15 வருடங்களிற்கும் மேல் அரசியல் கைதிகள் சிறைகளிலே இருக்கிறார்கள் அவர்கள் விடுதலை செய்யபட வேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். பாதுகாப்பு கவுன்சிலை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாகவும், பிரதமரோ அமைச்சரவையோ நீதிமன்ற தீர்பின்படி தற்போது இல்லை எனவே அந்த விடயங்களை பற்றி ஆராய வேண்டியுள்ளது, எனவே வெகுவிரைவில் மீண்டும் பேசுவதாக ஜனாதிபதி கூறினார்.
கிளிநோச்சியை சேர்ந்த அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை நீங்கள் நினைத்தால் விடுதலை செய்ய முடியும் என்று நாம் இன்போது ஜனாதிபதியிடம் கோரியிருந்தோம். அது தொடர்பாக பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தார். நீதிமன்ற தீர்பினால் எமது கலந்துரையாடல் நீண்டுசெல்லவில்லை. அரசியல் நெருக்கடி தீர்ந்த பின்பு மீண்டும் நாம் குறித்தவிடயம் தொடர்பாக பேசவிருப்பதாக செல்வம் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM