ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் கட்சித்தலைவர்கள் இல்லாது கட்சித்தலைவர்கள் கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ள நிலையில், கட்சித்தலைவர்களின் கூட்டம் சற்றுமுன்னர் இடம்பெற்றது.
குறித்த கட்சித்தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்காது ஒத்திவைப்புவேளை விவாதத்தை நடத்துவதற்கு குறித்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மஹிந்த தரப்பினர் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்களென நேற்றையதினம் தினேஷ் குணவர்தன மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM