முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரியங்கள்ளி - ஆண்டிகம பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.
அத்துடன் இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆண்டிகம பிரதேசத்திலிருந்து உடப்பு பொலிஸ் நிலையத்திற்குக் கடமைக்காகச் சென்ற பொலிஸ் காண்டபிள் ஒருவரின் மோட்டார் சைக்கிளிலும் கீரியங்கள்ளி பிரதேசத்தில் இருந்து ஆண்டிகம பிரதேசத்தை நோக்கிச் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் கல்குளிப் பிரதேசத்தில் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது விபத்துடன் தொடர்புடைய மோட்டர் சைக்கிள் ஒன்றில் முன்னால் அமர்ந்திருந்த மூன்று வயது சிறுவன் ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மோட்டர் சைக்கிளில் பயணித்த உயிரிழந்த சிறுவனின் தந்தை மற்றும் அச்சிறுவனின் சகோதரன் ஒருவனுடன் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் படுகாயமடைந்து முந்தல் மாவட்ட மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பபட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பலியான சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முந்தல் மாவட்ட வைத்தியசாலையயில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸாரும் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM