இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார் இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யா.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தில் இறுதி ஓவரை பாண்ட்யா அற்புதமாக வீசினார். இதனால் இந்தியா ஒரு ஓட்டத்தால் ‘திரில்’ வெற்றி பெற்றது.
நாங்கள் வகுத்த திட்டத்தை ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுத்தி இறுதி பந்தை வீசினார் டோனியும் பாண்ட்யாவை பாராட்டினார்.
அந்த நெருக்கடியான நேரத்திலும் சிரித்த முகத்தோடு எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர் சிறப்பாக பந்துவீசியதை அனைவரும் பாராட்டினர்.
இந்நிலையில் கிரிக்கெட் மூலம் பிரபலமாகத் தொடங்கிவிட்டதால், பாண்ட்யா கொல்கத்தாவை சேர்ந்த 21 வயதான மாடல் அழகி லிஷா சர்மாவை துரத்தி வருகிறார்.
நேரம் கிடைக்கும் போது இவர்கள் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி வருகின்றனராம். இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை லிஷா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
லிஷா சர்மா கூறுகையில், "பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவரை வீசும் போது கூட அவர் புன்னகை செய்தார். அந்த நெருக்கடியான நேரத்திலும் எப்படி சிரிக்க முடிகிறது என்று அவரிடம் கேட்டேன்.
அதற்கு நெருக்கடியாக உணர்ந்தால் பதற்றம் தான் அதிகரிக்கும் என்று கூறினார். அவரது அமைதி தான் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM