முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தெமட்டகொடையில் அமைந்துள்ள பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்திற்குள் சென்று பணியாளர்களுக்கு தாக்கி கலகத்தை விளைவிக்கும் விதத்தில் செயற்பட்டார் என அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அர்ஜூனவின் மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவனரால் கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் அர்ஜூன ரணதுங்க 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையிலேயே அர்ஜூன மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்பட்ட போது கொழும்பு மஜிஸ்திரேட் குறித்த வழக்கு விசாரணையை எதிர் வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM