இன்று பிறந்த குழந்தை முதல் வயோதிபர் உட்பட அனைவரும் 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா கடன்காரர்களாக இருக்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க சபையில் தெரிவித்தார்.
ராஜபக் ஷ கர்ச்சிப்பதனாலோ ரணில் விக்கிரமசிங்க முனகுவதனாலோ பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாது. எமது நாட்டுக்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை நடந்த பாராளுமன்ற அமர்வின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக ஆற்றிய உரை மீது சபை ஒத்திவைப்பு வேளை மீதான பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
நாம் 2016 ஆம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் இன்றிய நிலைமையே உள்ளது. வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பல திருத்தங்கள் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.
பல தேவைகள் உள்ளடக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது. ஆகவே 2016 ஆம் ஆண்டு திட்டமிட்ட வரவு – செல வுத் திட்ட அறிக்கையொன்று இல்லாத நிலைமை காணப்படுவது ஆச்சரியமளிக்கின்றது. இந்த ஆண்டு கடந்த ஆட்சியாளர் களை காரணம் காட்டி பல்வேறு குறைபாடுகளையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துக் கொள்ள முடியும். ஆனால் அடுத்த ஆண்டு இவ்வாறு கூறிக் கொண்டு இருக்க முடியாது. கடந்த காலங்களில் பல அனுபவங்களைக் கொண்டிருக்கின்றோம். மூடி மறைக்கப்பட்ட தகவல்கள் நிச்சயமாக வெளிவருவதைத் தடுக்க முடியாது.
தற்போதைய ஆட்சியாளர்களிடம் தூரநோக்க கொண்ட செயற்றிட்டம் இல்லை என்பது வெளியாகிவிட்டது. இவ்வாறான நிலையில் 5.3 சதவீத பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு அடைய முடியும். கடந்த மூன்று மாதங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் எம்மிடம் பொருத்தமான தீர்மானங்கள் இன்றி எவ்வாறு இலக்கு நோக்கி பயணிக்க முடியும். கடந்த காலங்களில் கப்ரால் மற்றும் பீ.பி.யின் மந்திரங்கள் தற்போதைய நிலைமையை ஏற் படுத்தியுள்ளன. அவர்கள் பிழையான தகவல்களை முன்வைத்தார்கள். இன்றும் அதேநிலைமையே நீடிக்கிறது. பொருளாதார பரவலாக்கத்தை பார்க்கையில் 41.8 சதவீதமாக மேல் மாகாணத்தில் காணப்படும் பொருளாதாரம் வடமாகாணத்தில் 3.8 சதவீதம் காணப்படுகின்றது. இவ்வாறு காணப்படுவதனால் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அடுத்து பொருளாதார வளர்ச்சி வீதத்தினை எடுத்துக் கொண்டால் சேவைத்துறையில் காணப்படும் குறைபாடுகளில் வீழ்ச்சி நிலைமையே காணப்படுகின்றது. அதேபோன்று ஏற்றுமதி வருமானமும் வெகுவாக குறைந்துள்ளது. மொத்த தேசிய உற்பத்தியில் பல்வேறு பிரச்சினைகள் காண ப்படுகின்றன.
கடந்த காலத்தில் மரக்கறி உண்பவர்களுக்கு கோழிக் குஞ்சுகளை பஷில் ராஜபக் ஷ வழங்கினார். அவர்கள் வீட்டுத் தோட்டத்தை முன்னெடுக்க முயன்றபோது அதற்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை. இவ்வாறுதான் கடந்த காலம் இருந்தது. இதனால் தான் வறுமை, இழப்புகள் என அனைத்துக்கும் உற்பத்தியாளர்கள் முகங் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட் டது.
உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான மானியங்கள் வழங்கப்பட வேண்டும். கைத் தொழில் துறையை ஊக்குவிப்பதற்கான மானியங்கள் வழங்கப்பட வேண்டும். உற்பத்திகளுக்கு மானியங்கள் வழங்குவதை இடை நிறுத்துவதால் நுகர்வோர்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஆகவே எமது நாட்டில் காணப்படும் வளங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது நாட்டில் அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியாது. இதேபோன்றுதான் ஏனைய நாடுகளும் காணப்படுகின்றன. இதனாலேயே உலக சந்தையில் அனைத்து நாடுகளும் தொடர்பை கொண்டிருக்கின்றன. அவ்வாறு நிலைமைகள் காணப்படுகையில் ராஜபக் ஷ கர்ச்சிப்பதனாலோ ரணில் விக்கிரமசிங்க முனகுவதனாலோ பொரு ளாதார நெருக்கடிகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாது.
தற்போதைய நிலையில் கடன் சுமை என்ற வண்டியின் சாரதியை மாற்றுவதால் எந்த பயனுமில்லை. அதாவது புகையிரத த்தில் பயணித்த குடும்பத்தினர் இறங்கியுள்ள போதும் அதே புகையிரதத்தில் அதே பாதை யில் ரோயல் பாடசாலைத் தரப்பினர் பயணி க்கின்றார்கள். ஆகவே தான் பொது மக்கள் ஆட்சியாளர்கள் மாறியுள்ளபோதும் மாற்றம் ஏற்படவில்லை என்ற சிந்தனைக்குள் சென் றுள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM