தனது காதலை ஏற்க மறுத்த காதலியை கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியா, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பஸ் நிலையத்திற்கு எதிரேயுள்ள புடவைக்கடையில் 21 வயதுடைய மெர்சி என்ற இளம் பெண் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த 25 வயதுடைய ரவி என்பவர் மெர்சியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று மாலை பஸ் நிலையம் எதிரே வந்த மெர்சியிடம் ரவி தன் காதலை சொல்லி தன்னையும் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் அதற்கு மெர்சி ரவியை காதலிக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மெர்சி கழுத்தில் பலமுறை குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மெர்சி இரத்தம் அதிக அளவில் வெளியேறியதால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மெர்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், குறித்த கொலை சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM