வெள்ளை வேனில் 5 மாணவர் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேக நபர் நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அது குறித்த விசாரணைகளின் நிமித்தம் இன்று நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.
நேற்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவில் அவரை ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் எனக்கு எந்த உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை. என்னை சி.ஐ.டி.க்கு அழைத்து சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரோ, பொலிஸ் மா அதிபரோ, பாதுகாப்பு செயலாளரோ எந்த அறிவித்தலையும் அனுப்பவில்லை என அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கூறி சி.ஐ.டி.யில் ஆஜராதிருந்தார்.
அத்துடன் நேற்றைய தினம் அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகத் தாயர் எனத் தெரிவித்திருந்தார். அதன்படியே அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM