பாடசாலை மாணவ- மாணவிகளின் நலன் கருதி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் புதிய உத்தரவை அனுப்பி உள்ளது.
முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பாடசாலையில் வீட்டுப் பாடம் வழங்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில் தெரிவித்ததாவது:-
முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பாடசாலைகள் வீட்டுப் பாடம் வழங்கக் கூடாது. இந்த இரண்டு வகுப்புகளிலும் மொழி பாடம், கணித பாடம் தவிர வேறு எந்த பாடங்களையும் பாடசாலைகளில் கற்பிக்க கூடாது.
முதலாம் வகுப்பு 3ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சுற்றுசூழல் தொடர்பான பாடங்கள், கணிதம் ஆகியவற்றை என்.சி.இ. ஆர்.டி. திட்டத்தின்படியே கற்பிக்க வேண்டும்.
குறித்த வகுப்பு மாணவ- மாணவிகள் பாடசாலைக்கு வரும்போது கூடுதலாக எந்த பாடபுத்தகங்களையோ, வேறு பொருட்களையோ கொண்டு வரும்படி அறிவுறுத்தக்கூடாது. முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகபை ஒன்றரை கிலோ எடையை தாண்டக் கூடாது. 3ஆவது முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தகபை எடை 2 கிலோ முதல் 3 கிலோ வரைதான் இருக்க வேண்டும்.
6ஆம் வகுப்பு, 7ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை 4 கிலோவுக்கு மேலும், 8ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான புத்தக பை எடை 4.5 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. 10ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை 5 கிலோவுக்கு அதிகம் இருக்க கூடாது. எந்தெந்த வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அந்த மாணவ- மாணவிகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM