பாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர் ஒருவர் 100 குழந்தைகள் பெறுவதே தனது இலட்சியம் என தெரிவித்து அதற்கான முற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது என்ற இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 35 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 21 மகள்கள் 14 மகன்கள் உள்ளனர்.
இவருக்கு கடந்த வாரம் தான் 2–ஆவது மற்றும் 3–ஆவது மனைவிகள் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்தன.
இவ்வளவு பெரிய குடும்பத்தை சிரமமின்றி நிர்வகிப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘சமீபத்தில் எனது மனைவிகள் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதனால் தற்போது எனது குழந்தைகள் எண்ணிக்கை 35 ஆகிவிட்டன.
இதனால் மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு 4ஆவது திருமணம் நடந்தால் 100 குழந்தைகளை பெற வேண்டும். அதுவே எனது ஆசையும் இலட்சியமும் ஆகும்.
எனது 3 மனைவிகள் மற்றும் குழந்தைகளை பராமரிக்க மாதம் 1 இலட்சம் ரூபா வரை செலவாகிறது. நான் தரமான வைத்தியராக இருக்கிறேன். சிறிய அளவில் வியாபாரமும் செய்கிறேன். அதன் மூலம் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியகிறது’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM