வட மாகாணம் முழுவதும் மாவீரர் தினத்தையொட்டி மாவீரர்களுக்கும் மாவீரர் குடும்பங்களுக்கும் பல்வேறு உதவி திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள், சுய தொழில் உபகரணங்கள் பொது அமைப்புக்களாலும் புலம் பெயர் உறவுகளாலும் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நாச்சிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 2007 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராட்ட களத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதற்கான படகு மற்றும் இயந்திரம் ஒன்றும் நேற்று சனிக்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் பின்னர் கால்கள் இரண்டையும் இழந்த பின்னர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வேறு ஒரு நபருடன் கூலி தொழிலாளியாக கடற்தொழிலில் ஈடுபட்டு வந்ததை அடுத்து கனடா வாழ் 'காலையடி உதவும் கரங்கள்' அமைப்பின் ஊடக குறித்த போராளிக்கு மீன் பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா. டெனிஸ்வரன் முன்னாள் போராளிக்கான உபகரணங்களை நேரில் சென்று வழங்கி வைத்தார்.
உதவியினை பெற்று கொண்ட முன்னாள் போராளியின் மனைவியும் இறுதி யுத்தத்தின் போது காயப்பட்டு தற்போதுவரை கால் ஒன்றில் பாதிப்போடு வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM