தன்னை உருக்கி  நமக்கு உருகொடுத்த இயேசு: இன்று புனித வியாழன்

Published By: MD.Lucias

24 Mar, 2016 | 10:38 AM
image

இரக்­கத்தின் யுபிலி ஆண்­டிலே நாம் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கிறோம். இறை­வனின் எல்­லை­யற்ற இரக்கம் இயே­சுவில் வெளிப் ­பட்­டதை நாம் அறிவோம். இயே­சுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறை­நி­கழ்ச்­சிகள் இறை­வ­னு­டைய இரக்­கத்தின் உச்­சக்­கட்ட வெளிப்­பா­டு­க­ளாக அமைந்­துள்­ளன. எனவே புனித வாரத்தின் மிக­முக்­கிய நாட்­க­ளுக்குள் காலடி பதிக்கும் நாம், இறை­வனின் இரக்கம் இயேசு வழி­யாக எப்­படி வெளிப்­பட்­டது என்­பதை இந்­நாட்­களில் சிறப்­பாகச் சிந்­திப்போம்.

புனித வியாழன் தின­மா­கிய இன்­றைய நாள் இயே­சுவின் வாழ்­விலும் அவ­ரு­டைய சீடர்­க­ளா­கிய கிறிஸ்­த­வர்­களின் வாழ்­விலும் முக்­கி­ய­மான நாள். இன்­றுதான் உலகம் உள்­ள­ளவும் தமது ஒப்­பற்ற உட­னி­ருப்பை உணர்த்தும் நற்­க­ருணை என்னும் அரு­ள­டை­யா­ளத்தை இயேசு நிறு­வினார். அந்த நற்­க­ரு­ணையைப் பொரு­ளு­ணர்ந்து கொண்­டா­டவும், தந்தை இறை­வ­னுக்கும் இத்­த­ர­ணிவாழ் மக்­க­ளுக்கும் உற­வுப்­பா­ல­மாக விளங்­கவும் குருத்­துவம் என்னும் அரிய அருள் அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­தி­யதும் இந்த நாளில்தான். தாழ்ச்­சியின் மாட்­சியை இந்தத் தர­ணிக்கு உணர்த்தும் விதத்தில் தம் திருத்­தூ­தர்­களின் கால­டி­களைக் கழுவி, அன்புக் கட்­ட­ளையைக் கொடுத்­ததும் இந்த நாளே. இயே­சு­வி­னு­டைய இந்தச் சீரிய செயற்­பா­டு­களின் ஆழ­மான அர்த்­தத்தை புரிந்­து­கொள்ள முயல்வோம்.

உயி­ருள்ள நீங்­காத நினைவுச் சின்னம்

தாஜ்­மஹால் என்­பது ஏழு உலக அதி­ச­யங்­களில் ஒன்று. உல­கத்தின் பல்­வேறு மக்­க­ளையும் கவர்ந்து ஈர்க்கும் அழ­கிய கட்­டிடம் இது. ஏழு உலக அதி­ச­யங்­க­ளி­லேயே முதன்­மை­யான, முக்­கி­ய­மான அதி­ச­ய­மாக இன்று இந்த தாஜ்­மஹால் கரு­தப்­ப­டு­கின்­றது. இந்தத் தாஜ்­ம­ஹா­லி­னு­டைய வர­லாறு மிகவும் சுவா­ரஷ்­ய­மா­னது.

இற்­றைக்கு 350 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இந்­தி­யாவை ஆண்ட மொக­லாய சக்­க­ர­வர்த்­தி­யான சாஜகான் என்ற அரசன் இதைக்­கட்­டினான். எதற்­காக இந்த மாபெரும் அழ­கிய கட்­டி­டத்தைக் கட்­டினான்? குழந்­தைப்­பேற்­றின்­போது இறந்த தன் ஆருயிர் மனை­வி­யான மும்தாஜ் மஹாலின் நினை­வாக இந்தத் தாஜ்­ம­ஹாலைக் கட்­டினான். இது சாஜகான் என்ற அந்த அரசன் தன் மனை­வி­யான மும்­தாஜ்மேல் கொண்ட அன்பின் அடை­யாளச் சின்னம். இது காலத்தால் அழி­யாத காதல் சின்னம்.

இயே­சுவும் தமது வாழ்வின் இறுதிக் கட்­டத்தில் தாம் தந்­தை­யிடம் செல்­ல­வேண்­டிய நேரம் வந்­த­பொ­ழுது ஒரு நீங்­காத நினைவுச் சின்­னத்தை, தனது உயி­ருள்ள பிர­சன்­னத்தை விட்­டுச்­செல்ல விரும்­பினார். அதுதான் நற்­க­ருணை!

பூச்­சி­யத்­திற்­குள்ளே ஒரு இராச்­சி­யத்தை ஆண்­டு­கொண்டு புரி­யா­மலே இருப்பான் ஒருவன் அவனைப் புரிந்­து­கொண்டால் அவன்தான் இறைவன் என்று பாடு­கிறான் ஒரு கவிஞன். ஆம் உல­கமே கொள்­ள­மு­டி­யாத இறைவன், ஒரு சிறு அப்­பத்­திற்குள் தன்னை சுருக்­கிக்­கொள்­கிறார், தன்னை குறுக்­கிக்­கொள்­கிறார். இது எப்­ப­டிப்­பட்ட விந்­தை­யான விடயம்?

நற்­க­ருணை - புரி­யாத புதிரா?

இயேசு தான் வாழ்ந்த காலத்தில் நற்­க­ரு­ணை­யைப்­பற்றி பேசு­கின்றார். யோவான் நற்­செய்தி இதைப்­பற்றி நமக்குச் சொல்­கி­றது விண்­ண­கத்­தி­லி­ருந்து இறங்கி வந்த வாழ்­வு­தரும் உணவு நானே. இந்த உணவை எவ­ரா­வது உண்டால் அவர் என்­றுமே வாழ்வார். எனது சதையை உண­வாகக் கொடுக்­கிறேன்.

அதை உலகு வாழ்­வ­தற்­கா­கவே கொடுக்­கிறேன் (யோ 6: 51) என்று இயேசு கூறி­ய­போது இதை அன்­றைய மக்­களால் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை. நாம் உண்­ப­தற்கு இவர் தமது சதையை எப்­படிக் கொடுக்க இயலும் என்ற வாக்­கு­வாதம் அவர்­க­ளி­டையே எழுந்­தது (6: 52).

குருத்துவத்தை ஏற்படுத்திய நாள்

இந்த நற்­க­ரு­ணையைப் பொரு­ளு­ணர்ந்து கொண்­டா­டவும், தந்தை இறை­வ­னுக்கும் இத்­த­ர­ணிவாழ் மக்­க­ளுக்கும் உற­வுப்­பா­ல­மாக விளங்­கவும் குருத்­துவம் என்னும் அரிய அருள் அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­தி­யதும் இந்த நாளில்தான். இதை என் நினை­வாகச் செய்­யுங்கள் என்று சொல்லி இறை­ப­ணி­யா­ளர்­களை குருக்­களை இயேசு ஏற்­ப­டுத்­து­கின்றார். குருத்­து­வத்தை ஏற்­ப­டுத்­திய இந்­நா­ளிலே இயே­சுவின் பொதுக்­கு­ருத்­து­வத்தின் பங்­கா­ளி­க­ளா­க­வி­ருக்கும் நாம­னை­வரும் தாழ்ச்­சி­யுடன் பணி­பு­ரிந்து வாழ எம்மை அர்ப்­ப­ணிக்க வேண்டும்.

இறைய­ரசின் பணி­யா­ளர்­க­ளா­கிய திருத்­தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் நற்­செய்திப் பணி­யாற்றும் அனைத்து கிறிஸ்­தவப் பணி­யா­ளர்­க­ளுக்­காவும் சிறப்­பாக இறை­வேண்டல் செய்­கின்ற நாளாக இந்நாள் அமை­கின்­றது. தமது வார்த்­தை­யாலும், வாழ்­வாலும் கிறிஸ்­து­வுக்குச் சாட்­சி­ப­கர இவர்­க­ளுக்கு இன்னும் இன்னும் இறை­யருள் கிடைக்க வேண்­டு­மென செபிக்க நாம் அழைக்­கப்­ப­டு­கின்றோம்.

நமக்குத் தரப்­பட்ட

வாழ்க்கைப் பாடம்

தங்­க­ளுக்குள் யார் பெரியவர் என்ற வாக்­கு­வாதம் அவர்­க­ளுக்குள் ஏற்­ப­டு­வதை இயேசு காண்­கிறார். தாழ்ச்சி பற்றி இயேசு சொல்லிப் பார்த்தார். அவ­ரு­டைய சீடர்கள் அதைப் புரிந்­து­கொள்­ள­வில்லை. எனவே செயல் மூலம் விளக்கம் கொடுக்­கின்றார்.

பாதம் கழுவும் நிகழ்ச்சி என்பது வெறும் சடங்கு அல்ல, அது வாழ்க்கை! அதிகாரமும், அகங்காரமும், நான் என்ற தன்முனைப்பும் நிறைந்த இன்றைய உலகில் நாம் தாழ்ச்சியின், பணிவின் மாதிரிகளாகத் திகழ வேண்டும். இதைத்தான் இயேசு இன்று நமக்கு வாழ்க்கைப்பாடமாக செய்முறைப் பயிற்சியாக செய்து காட்டுகின்றார்.

எனவே இன்றைய புனித நாள் நமக்குத் தரும் நலமான, நயமான சிந்தனைகளை உள்வாங்கி அர்த்தமுள்ள வகையில் நம் வாழ்வைக் கட்டியெழுப்புவோம்.

அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலையான தீர்வுகளுக்கான தேசிய கொள்கை அவசியம்...

2025-02-07 11:00:58
news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27