மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி குறித்த விசாரணைக்கான கட்டளை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (23-11-2018) வெள்ளிக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
மாந்தை மனித புதைகுழி தொடர்பான வழங்கு விசாரணையின் போது காணாமல்போன உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை(23-11-2018) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மாந்தை மனிதபுதைகுழியில் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இலங்கையில் எந்த பல்கலைக்கழகங்களிலும், நிறுவனங்களிலும் ஆய்வுசெய்ய முடியாது என்ற அடிப்படையில் அந்த மனித எச்சங்கள் காபன் பரிசோதனைக்காக வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் எந்த நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு தொடுனர் தரப்பிலும், காணாமல்போனவர்களின் உறவினர்கள் தரப்பிலும் விவாதங்களை ஏற்றுக்கொண்டு, நீதிபதி கட்டளையை வழங்க இருந்தார்.
ஆனால் இன்றைய தினம் கட்டளை வழங்கப்படவில்லை. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா இன்றைய தினம் விடுமுறையில் இருந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
இன்றைய தினம் பதில் நீதவானினால் குறித்த வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படும் என தவணையிடப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைக்காக மன்றில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி நவவி பிரசன்னமாகி இருந்ததோடு, குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் மன்றில் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM