சபாநாயகர் சரியான தீர்மானங்களை எடுப்பார் - ஹர்ஷன

Published By: Vishnu

20 Nov, 2018 | 06:03 PM
image

(நா.தினுஷா)

ஜனநாயக கொள்கைகளுக்கு மதிப்பளித்து அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு சுயாதீனமான சரியான தீர்மானங்களை சபாநாயகர் எடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மீது எழும் குற்றசாட்டுக்கள் தொடர்பிலும், எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், 

கடந்த 09 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்து, பொது தேர்தலை நடத்துவதாக வர்த்தமானியில் அறிவித்திருந்தார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என சபாநாகருக்கு அறிவித்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையானோரின் விருப்புடன் கடந்த 13 ஆம் திகதி உயர்நீதிமனறத்தில் ஐக்கிய தேசிய முன்னனி உட்பட அரசியல் கட்சிகள் சிவில் சமூகங்கள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அதனையடுத்து நீதிமன்ற ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் 5 ம் மற்றும் ஆறாம் திகதிகளில் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட 07 ஆம் திகதி தீர்ப்பு வழங்குவதாகவும் இந்த வழக்கினை காலந்தாழ்தியிருந்தது.

இதேவேளை எதிர்வரும் 07 திகதி உயர் நீதிமன்றம் தனது சுயாதீனத்தன்மையினூடாக ஜனநாயகமானதும் அரசியல் அமைப்புக்கு ஏற்புடையதுமான தீர்ப்பினை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46