கலாபவன் மணியின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பூச்சிக்கொல்லி மருந்தை கலாபவன் மணியின் மாமனார் கடையில் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நடிகர் கலாபவன் மணி கடந்த 6ஆம் திகதி மது அருந்திய நிலையில் உயிரிழந்தார். அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் அருந்திய மதுவில் அளவுக்கு அதிகமாக மெத்தனால் அல்கஹால் இருந்ததாக தெரிவித்தனர். மேலும் அனுமதி பெற்று விற்கப்படும் மதுவில் இவ்வளவு அதிக அளவில் மெத்தனால் அல்கஹால் இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
கலாபவன் மணியின் வயிற்றுப்பகுதி இரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வில் அவரது உடலில் பூச்சி மருந்து கலந்து இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. மதுவில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலாபவன் மணி மரணம் அடைவதற்கு முன்தினம் அவருடன் மலையாள நடிகர்கள் சாபு, ஜாபர் இடுக்கி ஆகியோர் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்தது. பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். ‘‘கலாபவன் மணி மது அருந்தியபோது நான் அங்கிருந்து சென்று விட்டேன்’’ என்று சாபு வாக்குமூலம் அளித்தார்.
ஜாபர் இடுக்கி, ‘‘நாங்கள் எல்லோரும் சேர்ந்து மது அருந்தினோம்’’ என்று கூறினார். நடிகர் சாபுவுக்கும், கலாபவன் மணிக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக இணையதளங்களில் தகவல் பரவியது. இதனை சாபு மறுத்துள்ளார். ‘‘கலாபவன் மணி மரணத்தில் தேவையில்லாமல் என்னை சம்பந்தப்படுத்துகிறார்கள். அவருடன் நான் மது அருந்தவில்லை’’ என்று கூறினார்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தற்போது அருண், விபின், முருகன் ஆகிய 3 பேரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இவர்கள் கலாபவன் மணி வீட்டில் வேலை பார்த்தவர்கள். கலாபவன் மணி மருத்துவமனையில் இறந்ததும் இவர்கள் 3 பேரும் அவசரமாக பண்ணை வீட்டுக்கு திரும்பி வீட்டை சுத்தப்படுத்தி உள்ளனர்.
மது போத்தல்களை அப்புறப்படுத்தி உள்ளார்கள். கலாபவன் மணி வாந்தி எடுத்ததையும் கழுவி சுத்தப்படுத்தி உள்ளனர். தடயங்களை இவர்கள் 3 பேரும் அழித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. 3 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் பொலிஸார் சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்ட பண்ணை வீட்டை சோதனை செய்தனர். அந்த வீட்டில் இருந்து பூச்சிக் கொல்லி மருந்து போத்தலை கைப்பற்றினர்
மேலும் ஒரு புதிய திருப்பமாக கலாபவன் மணியின் உடலில் கலந்திருந்ததாக கூறப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை அவரது மாமனார் கடையில் வாங்கியதாக குறித்த மருந்தை விற்பனை செய்த கடைக்காரர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM